|
ஈழவர் சினிமா Eezhavar Cinema |
|
|
ஒற்றை பனை மரம் Ottrai Panai Maram United Kingdom • 2018 • 103 Minutes< 2018 விவரம் | Synopsis இலங்கையில் 2009 மே 18 அன்று முடிவுக்கு வந்த தமிழர்களுக்கான தனி அரசு கோரி 30 ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதப் போராட்ட பின்னணியில் அமைந்துள்ளது இத்திரைப்படம். முன்னெப்போதும் இல்லாத அளவிலான அழிவையும் உயிர்ச்சேதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இப்போரில் ஒன்றரை இலட்சம் அளவில் மக்கள் உயிரிழந்தனர், தமிழர்களின் நகரங்கள் இடிபாடுகளாகின, குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டன; இலங்கையின் கொடூரமான இராணுவ நடவடிக்கை சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தி, சுமார் ஐந்து லட்சம் தமிழர்களை வன்னியில் உள்ள சுகாதாரமற்ற அகதி முகாம்களுக்குள் தள்ளியது. அதே வேளையில், தெற்கே உள்ள சிங்களப் பகுதியில் அரசாங்கம் வெற்றி விழாவைக் கொண்டாடியது. இந்தப் படம் போரினால் உருவாக்கப்பட்ட மூன்று உயிர்களின் வேதனையான பயணங்களின் ஊடாக பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. கொடுமையான போரில் கர்ப்பிணி மனைவியை இழந்த சுந்தரம், போராளியான கணவனை இழந்த கஸ்தூரி மற்றும் பயங்கரமான வான்வழித் தாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த 16 வயது சிறுமி ஆகியோர் அரசு 'மறுவாழ்வு மற்றும் நல்வாழ்வு முகாம்கள்' என்று பெயரிட்டிருந்தாலும் உண்மையில் சொல்லொணாத் துயரம் நிறைந்த அகதி முகாம்களில் வாழ்ந்து, இறுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய நிலையில் ஒரு குடும்பமாக ஒன்றிணைகிறார்கள். பின்கதை, அவர்களின் புதிய வாழ்க்கை எவ்வாறு தொடங்குகிறது, புதிய சூழலின் கசப்பான யதார்த்தம், தங்கள் சொந்த சமூகத்திலிருந்தே அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் தொடரும் அரச பயங்கரவாதம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. இது ஒரு முக்கியமான திரைப்படத்தை விட மேலானது; இது இலங்கையின் வரலாற்றில் உள்ள ஒரு மோசமான, அவமானகரமான பகுதியின் ஆவணப்பதிவாகும். Set against the backdrop of the 30 years of armed conflict for a separate state for Tamils in Sri Lanka, which ended on the 18th May 2009, the film is striking and spotlights the unprecedented destruction and loss of life. As many as 146,000 dead, Tamil towns reduced to rubble, families torn apart, the brutal Sri Lankan military campaign caused untold hardship, pushing nearly half a million Tamils into squalid refugee camps in Wanni. At the same time, the government held victory celebrations in the southern Sinhala state. This film takes audiences through the painful journeys of three lives shaped by the war. Sundaram, who lost his pregnant wife in the brutal war, Kasthoori, who lost her husband, who is a freedom fighter, and a 16 year old girl whose entire family was killed in a horrific aerial bombardment happened to have gave in themselves as a family unit—having gone through an agonizing life in the horrific refugee camps which the government claiming, “Rehabilitation and Welfare camps”, and finally, after three years returning to their native villages. It focuses on how their new lives begin, the grim reality of the new environment, the challenges that they have to face from their own community, and continuing state terrorism. This is more than just an important film; it’s a documentation of an ugly and shameful part of Sri Lanka's history.
விருதுகள் | Awards வெளியீடு | Release
விமர்சனங்கள் | Reviews
|
தயாரிப்பு நிறுவனம் Production Company
தயாரிப்பாளர் Producer
நடிகர்கள் Casts
படக்குழு The Crew
இசைக்குழு Music Group
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||